22 May 2010

அன்புத்தங்கைக்கு...


அன்புத்தங்கைக்கு...

- அவினேனி நா.பாஸ்கரன்

இந்த அக்டோபரோடு
இருபத்தி ஒன்றாகிறது உன் அகவை
கடந்து செல்லும் அத்தனை
ஆட்டோக்களும் நினைவுபடுத்துகின்றன
உனக்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டிய
கடமையை

நன்றாகப் படித்து
பட்டமும் பெற்றுப் பணிக்கும்
செல்கின்றாய் - கைநிறைய
காசும் பெறுகின்றாய்

எப்படித் தேடுவேன்
யார் நல்லார் என்று ?
எங்கு பார்ப்பேன்
உன்னை மனங்கலங்காமல்
கவனிக்கும் ஓர் உயரிய ஆண்மகனை ?

எவரையேனும் காதலிக்கிறாயா என்றேன்
நீ காதலிக்கும் அளவுக்கு நேர்த்தியான
ஆண்மகனை சந்திக்கவில்லையென்றாய்

என் நண்பர்கள் யாருக்குமே
உனை மணக்கும் தகுதி இல்லை
உன்னுடைய நண்பர்களையும்
பரிசீலனை செய்துப் பார்த்தேன்
ஒருவரும் தேறவில்லை

இலட்சங்களும் தங்க ஆபரணமும்
கேட்கும் நபர்களை ஆண்கள் என்றே
ஏற்க இயலவில்லை என்னால்

அன்றாடம் காய்ச்சியாய் வாழும்
சில நல்லுள்ளங்கள் இருக்கிறார்கள்தான்
ஆனால் உனை இராணியாய் வைத்துகாக்க
இயலாது அவர்களால்
ஊண் வருத்தி நீ சிரமப்படுவதை
சகிக்க முடியாது என்னால்

நம் வீட்டில் ஒன்றும் தங்கத்தட்டில்
உண்ணும் செல்வச் செழிப்பு இல்லைதான்
பருத்தியாடைகளும் கேழ்வரகு கூழுமாய்த்தான்
வளர்ந்தாய்
செல்லுமிடத்திலாவது நீ செழித்திருக்க
வேண்டுமென விரும்புகிறது நெஞ்சு

அதற்கே தேடுகிறேன்
அன்பும் பண்பிலும் செல்வச்செழிப்பிலும்
சிறந்திருக்கும் சான்றோனாய்

இராமனே பிறப்பெடுத்து வந்தாலும்
மறுத்துவிடுவேன் - மென்மையான
உன்னால் இயலாது தங்கையே
பிரச்சினைகள் பலவற்றில் போராடிச்
சீதையாய் சிதிலப்பட

'போராடுவதுதான் வாழ்க்கை ' என்
கருத்தை எனக்கே சொல்கிறாயா ? - அது
உனக்கல்ல என் அன்புத்தங்கையே...
எனக்கும் என்னைத்
தொடர்வோர்க்கும் மட்டும்தான்.

-------------------------------------------------------------------------------------------

Published in Thinnai.com on 19 August 2001 

Original Link :  http://www.thinnai.com/?module=displaystory&story_id=30108196&format=html

Here is the PDF version if you are unable to see the fonts properly -

http://www.mediafire.com/?hiiznwmmyyw

கொட்டிவிட்ட காதல்....


கொட்டிவிட்ட காதல்....

- அவினேனி நா.பாஸ்கரன்

பதினாறு முதலே எங்கும் சிந்திவிடாமல்
மனதிலே சேமித்துவந்தேன் முழுக்காதல்
மனமுதிர்ந்தபின் வரவேண்டுமென்று

பன்னிரண்டாம் வகுப்பில்
கவிதாவின் குறுகுறு கண்கள் பட்டு
சிறு ஓட்டைவிழுந்துவிட
உடனடியாய் அடைத்துவிட்டேன்

கல்லூரி இரண்டாம் ஆண்டில்
காதல் கீதல் என்று ஏதேதோ
உளறிய உயிர்த் தோழியிடம்
'இதெல்லாம் இனக்கவர்ச்சி 'யென
அறிவுரை சொல்லி
உதாசீனப்படுத்திவிட்டேன்

கல்லூரி செல்லும் காலைநேரப்
பேருந்தில் கவிதை கொழிக்கும்
விழிகளோடு அனுதினமும்
அம்பெய்திய பெயர்தெரியாத
அம்மணியோடு
பேருந்தின் ஓர் உலுக்கலில் உடம்போடு
மனசும் உரசிக்கொள்ள
மனதை கட்டிப்போட இயலாது
பேருந்தை மாற்றிக்கொண்டேன்

வேறு சில சில்லென்ற சந்தர்பங்களிலும்
சிறகு முளைத்த மனது
பறக்க துடிக்கையிலெல்லாம்
வெட்டி வைத்து கட்டிவைத்தேன்

உள்ளக்காதல் அத்தனையும்
உனக்காக சுமந்துவந்தேன்
உன் ஒவ்வொரு அசைவிலும்
உருகியுருகி காதல் வளர்த்துவந்தேன்
காதல் கண்கொண்டுப் பார்த்ததினால்
உனக்குள் காதல் உள்ளதை கண்டுகொண்டேன்

சரியான ஒரு சாயங்கால பொழுதில்
மனதில் கனத்தக் காதலை
உனக்கு பகிர்ந்தளிக்க பதறியபொழுதுதான்
சொன்னாய்
நீயும் காதலிப்பதாய்
ஆனால்
காதலன் நான் அல்லன்
என்று அறிந்தபொழுதே
அறுந்து விழுந்துவிட்டேன்

காதலிக்கப்பட்டபொழுதும் இல்லை - மனதை
கட்டிவைத்தபொழுதும் இல்லை - அவளை
காதலித்தபொழுதும் இல்லை - எனது
காதல் நிராகரிக்கப்பட்டபொழுதும் இல்லை
நேற்றுவரை என்னை தூண்டிவிட்டு
வேடிக்கை பார்த்தவர்கள்
இன்று என்னை பார்க்கிற பார்வை
அப்பப்பா அந்த பார்வையில் தான்
எத்தனை விஷமங்கள்
அரளியை அரைத்தல்லவா
ஊற்றுகிறார்கள்
எல்லாம் சோகத்தின் மறு உருவாய்
நெஞ்சை அழுத்திக்கொள்கிறது.
காதல் நிராகரிப்பையும் தாங்கிக்கொண்ட
என் நெஞ்சே!
ஏன் இந்த போக்கற்றவர்களின்
பார்வைகளுக்கு பயம் கொள்கிறாய் ?

-------------------------------------------------------------------------------------------

Published in Thinnai.com on 12 August 2001

Original Link : 

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30108126&format=html

Here is the PDF version if you are unable to see the fonts properly -

http://www.mediafire.com/?gmzzmi3tjjx